தென் சென்னை செய்திகள்
சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி- விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் ஆய்வில் இருக்கும்போதே கேரள அரசு, வேண்டும் என்றே முல்லைப் பெரியாறு பிரச்சினையைக் கிளப்பியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்டு, இந்திய அரசின் சின்னமாக தற்போது தமிழ்நாட்டுக்கு எந்த முகத்தோடு பிரதமர் வருகிறார் என்றும் விஜயகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே முல்லைப் பெரியாறு பிரச்சினையை உடனடியாக நடுவண் அரசு தீர்க்க வலியுறுத்தி வரும் 25 மற்றும் 26-ந் தேதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

rphofdsftu
Posted at 2012-02-12 08:53:42
WycIFD xbqrxxsgmfpw
Reply to comment