தென் சென்னை செய்திகள்

புதிய மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: அண்ணா ஹசாரே குழு வலியுறுத்தல்

காஸியாபாத், டிச.22: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா மக்களுக்கு விரோதமானது மற்றும் அபாயகரமானது என அண்ணா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர். இந்த மசோதாவை நிராகரித்துள்ள ஹசாரே குழுவினர், அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.சிபிஐயை சுதந்திரமான அமைப்பாகக் கொண்டுவரும் வகையில் புதிய மசோதாவை நாடாளுமன்றம் கொண்டுவர வேண்டும் என அவர்கள் கூறினர்.

தற்போதைய மசோதாவின்படி, லோக்பாலை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். அதன் உறுப்பினர்களை விருப்பப்படி நியமிக்கவோ, நீக்கவோ மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட லோக்பால் மசோதாவைவிட இது மோசமானது. இந்த புதிய மசோதாவை நிராகரிக்கிறோம். இதை வாபஸ் பெற்று புதிய மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

10 சதவீத அரசியல்வாதிகள் மட்டுமே லோக்பால் வரம்புக்கு வெளியே உள்ளனர். 5 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே லோக்பால் வரம்புக்குள் உள்ளனர் என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கோயில்கள், மசூதிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், கிரிக்கெட் கிளப்புகள், குருத்வாராக்கள், சுய உதவிக்குழுக்கள் அனைத்தும் லோக்பால் வரம்புக்குள் உள்ளன. அரசியல்வாதிகளையும், அரசு ஊழியர்களையும் தவிர அனைத்து குடிமகன்களும் ஊழல்வாதிகள் என அரசு கருதுகிறது என்பது இந்த மசோதாவின் மூலம் தெரியவந்துள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Post your comments...

  • Gamze

    Posted at 2012-02-10 20:36:52

    Posts like this birghetn up my day. Thanks for taking the time.

    Reply to comment

  • Gamze

    Posted at 2012-02-10 20:36:51

    Posts like this birghetn up my day. Thanks for taking the time.

    Reply to comment

  • Gamze

    Posted at 2012-02-10 20:36:49

    Posts like this birghetn up my day. Thanks for taking the time.

    Reply to comment

  • Arie

    Posted at 2012-02-08 21:38:33

    An intelligent point of view, well erxpesesd! Thanks!

    Reply to comment

  • Arie

    Posted at 2012-02-08 21:38:31

    An intelligent point of view, well erxpesesd! Thanks!

    Reply to comment

  • Arie

    Posted at 2012-02-08 21:38:30

    An intelligent point of view, well erxpesesd! Thanks!

    Reply to comment

உங்கள் கருத்து

முல்லை பெரியாறு அணை அரசியல் ஆக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

அரசியல் ஆக்குவது தவறு. - 50%
நல்ல உறவு நீடிக்க வேண்டும் - 50%
கருத்து கூற விரும்பவில்லை - 0%

Total votes: 6
The voting for this poll has ended on: 07 ஜன 2012 - 16:05

சிறப்பு இணைய தளங்கள்