சினிமா
கவர்ச்சியை ரசிப்பது பிடிக்காது! ராணி முகர்ஜி ஓப்பன் டாக்!!
என் கவர்ச்சியை ரசிகர்கள் ரசிப்பது எனக்கு பிடிக்கவில்லை, என்று பாலிவுட் கவர்ச்சிக் கன்னி என்று வர்ணிக்கப்படும் நடிகை ராணி முகர்ஜி கூறியுள்ளார். இந்தித் திரையுலக ரசிகர்களின் இதயங்களில் இப்போதும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பவர் ராணி முகர்ஜி.

அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டியில், 12ம் வகுப்பு படித்தபோது தயாரிப்பாளர் சலீம் அக்தர், `ராஜா ஆயேகி என்ற படத்தில் நடிக்க அழைத்தார். நடித்தேன். அதுதான் என் முதல் படம். என் முதல் படம் நன்றாக ஓடவில்லை. என் சினிமா வாழ்க்கை அதோடு முடிந்தது என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அடுத்து நான் அமீர்கானுடன் இணைந்து நடித்த, `குலாம் சக்கை போடு போட்டது. அதன் பிறகு மின்னல் வேகத்தில் வளர ஆரம்பித்தேன். அப்போதே எனக்கு `கவர்ச்சிக் கன்னி பட்டம் கொடுத்து விட்டார்கள்.
கவர்ச்சி நடிகையாக என்னை ரசிப்பது எனக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட புகழை நான் விரும்புவதில்லை. எனது குடும்பத்தினர் ஏற்கனவே பிரபலமானவர்கள். நடிப்பிற்காக எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை.
டைரக்டர் சொல்கிறபடி நான் நடிக்கிறேன். அதனால், என் நடிப்பு நன்றாக இருந்தால் அந்த பாராட்டு டைரக்டருக்குத்தான் போய் சேரவேண்டும், என்று கூறியுள்ளார். வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ராணி, `நான் இரவு பார்ட்டிகளுக்கு செல்வதில்லை. மது விருந்துகளில் கலந்துகொள்வதில்லை. எனக்கு எந்த நடிகர் மீதும் ஈர்ப்பும் இல்லை. எனது எல்லா கவனங்களும் நடிப்பில் மட்டுமே இருக்கிறது. அதுவே எனது வெற்றி ரகசியம் என்று கூறியிருக்கிறார்.

Posted at 2012-02-09 11:29:29
What an awesome way to explain this-now I know eevrtyhing!

Posted at 2012-02-09 11:29:27
What an awesome way to explain this-now I know eevrtyhing!

Posted at 2012-02-09 11:29:25
What an awesome way to explain this-now I know eevrtyhing!

Auth
Posted at 2012-02-11 01:21:33
Thanky Thanky for all this good infromaiotn!
Reply to comment